News Just In

7/18/2022 12:42:00 PM

நாவற்குடா பொது சந்தையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு




மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பொதுசந்தை பகுதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (18) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தை கட்டிடத்திற்கு சம்பவதினமான இன்று காலையில் வியாபாரத்துக்காக வந்தவர்கள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணையில் குறித்த நபர் 60 வயது மதிக்கத்தக்கதுடன் இவரை இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த சடலத்தை பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: