ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலில், தான் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பதவியில் செயற்படுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) நியமிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமர் பதவிக்கு பெயரிடுமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு (Mahinda Yapa Abeywardena) அவர் இதனை அறிவித்துள்ளார்.
இந்த தகவலை பிரதமர் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
No comments: