படுவான்கரை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் விவசாயிகளின் நெல் அறுவடை மேற்கொள்வதற்காக இன்று விவசாயிகளுக்கு சுமார் 6 ஆயிரம் லீட்டர் எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஆரையம்பதி உரிமையாளர் கே சுரேஷ்சிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறுவடை விவசாயிகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு ஆரையம்பதி ஐஓசி நிறுவனம் முன்வந்தது.
அதற்கமைய இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது அறுவடைக்குத் தேவையான எரிபொருள்களை பெற்றுக்கொண்டனர்.இந்த நெல் அறுவடைக்கான எரிபொருள் யோசனைகளைமுன்வைத்த அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன்இன்று ஸ்தலத்துக்குவந்து விநியோகத்தினை பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை பிறப்பித்தார்.
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த அம்பிளாந்துறை கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி பிரதேச கமநல சேவைகள் நிலையப்பிரிவில் அடங்கும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளே தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
No comments: