News Just In

7/25/2022 05:23:00 PM

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேருக்கு பயணத் தடை




இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேருக்கு பயணத்திற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜோசப் ஸ்டாலின், ஜீவந்த பீரிஸ், வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர உள்ளிட்ட 6 பேருக்கு பயணத்தை தடை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: