News Just In

7/23/2022 06:29:00 AM

இலங்கையில் 25 மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்படவுள்ள பரிசோதனை!

தேசிய எரிபொருள் அனுமதி(National Fuel Pass program) திட்டம் 25 மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படவுள்ளது.

“தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு நேற்றையதினம் கொழும்பில் 2 இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று சோதனை செய்யப்படும்.

சோதனை முடிவடைந்தவுடன் இதனை தேசிய அளவில் அறிமுகப்படுத்தலாம் என நம்புகிறோம்” என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.



No comments: