News Just In

7/22/2022 06:41:00 PM

பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் தன்னை சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில்!

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 'தாராளவாத ஜனநாயகவாதி' என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என 43 வது படைப் பிரிவு அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் பதவிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தன்னை ஒரு சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: