News Just In

6/11/2022 07:22:00 PM

அடுத்தவார மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு



எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொசன் போயா தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் மற்றும் 15ஆம் திகதிகளிலும், 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: