நாளை முதல் பிசீஆர் அல்லது அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உட்புற மற்றும் வெளிப்புறம் ஆகிய அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது இனி அவசியமில்லை என சுகாதார அமைச்சு இன்று(09) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றை தொடர்ந்து இலங்கையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: