கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர்களை நபர் ஒருவர் வென்றுள்ளார்.
லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் லொத்தர் சீட்டிலுப்பில் ஒருவர் இவ்வாறு பாரிய தொகை பணப்பரிசு வென்றுள்ளார். இந்த லொத்தர் சீட்டு றொரன்டோவில் எங்கோ ஓர் இடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் றொரன்டோ மற்றும் இட்டோபிகோக்கில் தலா ஒரு மில்லியன் டொலர் என்ற அடிப்படையில் இரண்டு லொத்தர் சீட்டுகளுக்கு பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
எவ்வாறெனினும், இந்த பரிசுத் தொகையை வென்ற நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஹமில்டனில் சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 60 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி ஜாக்பொட் பரிசு 21 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: