அமெரிக்கத் தூதர் ஜூலி சங்கக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஓன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்தும் உடனிருந்தார். இது குறித்து அமெரிக்கத் தூதர் "பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்", என அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
No comments: