News Just In

5/07/2022 12:54:00 PM

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மதத் தலைவர்களின் ஆலோசனைகள்!

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மதத் தலைவர்களின் ஆலோசனைகள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த அமர்வில் ஆராயப்பட்டதாக அதன் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இதுவிடயமாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாதாந்த அமர்வைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தனியார் விடுதியில் வியாழக்கிழமை 05.05.2022 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஹிந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் சமாதான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தி செயற்திறன் மிக்க பிரஜைகளாகச் செயற்படுதல் வேண்டும் என்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக அங்கு பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

சமூகங்களுக்கிடையில் சகல அம்சங்களிலும் உயிரோட்டமுள்ள தொடர்பைப் பேணுவதனூடாக சமகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

.எச்.ஹுஸைன்










No comments: