News Just In

5/16/2022 06:30:00 PM

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாடசாலைகள் நாளை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளும் நடைபெறாத நிலையில் அடுத்த சில நாட்களில் ஒரு சில மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

இதனை அடுத்து நாளையதினம் நாடளாவிய ரீதியில் நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் மீளத் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: