News Just In

5/06/2022 09:47:00 PM

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானம்!

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளித்துள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து முதல் தடவையாக இராஜினாமா செய்திருந்திருந்தார்.

பின்னர், நேற்றைய தினம் புதிய பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில், அதில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக இரண்டாவது தடவை அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: