பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
அரச தலைவரது மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார்.
தற்போதைய நிலையில் பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவை அமையவேண்டியதன் அவசியம் குறித்து அரச தலைவர் விளக்கியுள்ள நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ச இந்த பதவி விலகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பதவிகளை துறப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமர் கூறியபோதும், அதனை ஏற்காத அரச தலைவர், இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதென்றும், அதன் பின்னர் புதிய அமைச்சரவையை எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments: