News Just In

5/23/2022 03:10:00 PM

உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம்




(சர்ஜுன் லாபீர்)

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர் வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இன்று(23) திங்கட்கிழமை கல்முனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இஸ்லாமாபாத் கிராமத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சேனைக்குடியிருப்பு விவசாய போதனசிரியர் டீ.செந்தூரன், தொழில்நுட்ப உதவியாளர் எல்.தீபாலினி
பெரியநீலாவனை தொழில்நுட்ப உதவியாளர் திருமதி ஹேமஜோதி நிலோசன்
கல்முனை விவசாய போதனாசிரியர் திருமதி எஸ்.கிரித்தீகா,சமூர்த்தி முகாமையாளர்களான எஸ்.பரீரா,ஏ.எம்.எஸ் நயீமா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வீட்டு தோட்ட பயிர் செய்கை பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயிர் மர கன்றுகள், விதை பக்கற்றுக்கள் மற்றும் மரவெள்ளி கிழங்கு கம்புகள் என பயனாளிகளுக்கு இன்று இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.






No comments: