News Just In

5/15/2022 06:29:00 AM

கோட்டா கோ கம தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இன்றையதினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டா கோ கம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக அவர் கூறினார்.போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.


No comments: