News Just In

3/09/2022 06:03:00 PM

நாட்டில் இராணுவத்தினரின் கீழ் செல்லும் முக்கிய பதவிகள்!


பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் S.M.R.W டி சொய்சாவை நியமிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர் இதற்கு முன்னர் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு நாளைய தினம் தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இரண்டு டீசல் கப்பல்கள் தற்போது தரையிறங்கியுள்ள நிலையில், மொத்த எரிபொருள் திறன் 65,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை நாட்டின் பல்வேறு அமைச்சுகளின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: