தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
யாழில் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு-கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் என்பவற்றைக்கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
No comments: