வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண்ணொருவர் அவர் எடுத்துச் சென்ற நகைகளை தொலைத்துள்ள சம்பவமொன்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கே.கே.வீதியிலுள்ள பெண்ணொருவரே அவரது எட்டு பவுன்களுக்கு மேற்பட்ட நகைகளை தொலைத்துள்ளார்.
குறித்த பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால், திருடனுக்கு பயந்த அந்த பெண்மணி வேலையொன்றின் காரணமாக வீட்டிலிருந்து நகைகளுடன் வெளிச் சென்ற போதே நகைகளை தொலைத்துள்ளார்.
இவ்வாறு தொலைந்து போயுள்ள நகைகளை தேடும் நடவடிக்கையில் பெண்ணின் குடும்பத்தார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: