கல்குடா அனர்த்த அவசர சேவை, கிரான் வாழ் இளைஞர் ஆகிய அமைப்புகளுக்கிடையிலான சினேக பூர்வ சந்திப்பொன்று புதன்கிழமை இரவு (19) ஓட்டமாவடியில் இடம்பெற்றது.
கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பின் தலைவரும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவருமான ஏ.சீ.எம்.நியாஸ் ஹாஜி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் அர்ப்பணிப்புள்ள சேவையை கிரான் வாழ் இளைஞர் அமைப்பினர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பு இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் சென்று தங்களது சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இளைஞர் அமைப்பினர் குறித்த சந்திப்பின் போது தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி மரணிப்பவர்களை மீட்பது, இறந்தவர்களின் உடல்களை ஏற்றிச் செல்ல வாகன ஒழுங்குகளை மேற்கொள்வது போன்ற பல்வேறுபட்ட சேவைகளை கல்குடா அனர்த்த சேவை அமைப்பு மிகவும் திறன்பட செய்து வருகிறது.
இன, மத வேறுபாடுகளை கடந்து சேவையாற்றி வரும் இவ் அமைப்பின் சேவையை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் கிரான் வாழ் இளைஞர் அமைப்பின் தலைவர் நா. மயூரன் தலைமையிலான குழுவினர் நன்றிக் கடிதம் ஒன்றை கல்குடா அனர்த்த அவசர அமைப்பினரிடம் வழங்கி வைத்தனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: