News Just In

1/13/2022 06:31:00 AM

வாழைச்சேனை ஏ.எச். பாலர் பாடசா!லையில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு!

வாழைச்சேனை ஏ.எச். பாலர் பாடசாலையில் இவ்வாண்டிற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை (12.01.2022) நடைபெற்றது.

பாடசாலை பொறுப்பாசிரியை எம்.எஸ்.எப்.சம்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், புதிய மாணவர்களுக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புப் பண்டம் வழங்கி வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்) 







No comments: