News Just In

1/13/2022 06:38:00 AM

வாழ்வாதார உதவிகள் கையளிக்கும் நிகழ்வு - 2022

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அல்ஹாஜ் ZA.நஸீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் முயற்சியின் ஊடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பயனாளிகளுக்கான வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கும் ஆடுகள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று(12.01.2022) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கோறளைப்பற்று மத்தி இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் கோறளைப்பற்று மேற்கு இணைப்பாளர் மெளலவி தாஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ருவைத் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments: