உள்ளூராட்சி நிறுவனங்கள் முதல் அமைச்சரவை வரையிலான அரசியல்வாதிகள் தனிப்பட்ட நலனுக்காக செயற்படும் கலாசாரம் உருவாகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வு ஒன்றை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தநிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, கையூட்டல் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதில் மந்தநிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
மணல் அகழ்வு, மதுபானசாலைகள் மற்றும் பேருந்து சேவை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கே சிலர் அரசியலுக்கு பிரவேசிக்கின்றனர்.
சிலர் இலங்கையில் மட்டுமல்லாது, வெளிநாடுகளின் வங்கிக்கணக்கிலும் வைப்பிலிடுவதுடன், சொத்துகளை சேகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்தநிலை எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
No comments: