News Just In

1/20/2022 06:37:00 AM

மின்வெட்டு தொடர்பாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நீர் மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு மேலும் குறையும் பட்சத்தில் ஐந்து முதல் ஆறு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மே மாத இறுதிக்குள் நீர் மின் உற்பத்தி போதியளவு அதிகரிக்கப்படாவிட்டால், எவ்வளவு காலம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்க முடியாது என சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான மின் நிலைய வசதிகள் இல்லை எனவும் அவர் கூறினார்.

இதுபோன்ற சமயங்களில் அவசர கால கொள்முதலுக்கு மின்சாரம் வழங்க தனியார் துறையே தொழில் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறினார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: