News Just In

1/20/2022 01:56:00 PM

மின் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!


நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு 1800 மெற்றிக்தொன் எடையுடைய டீசல் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனவே இன்றைய தினம் மின் வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்றூ நவமணி தெரிவித்துள்ளார்.எரிபொருள் கிடைக்கப் பெற்ற காரணத்தினால் மற்றுமொரு மின்பிறப்பாக்கி தொழிற்படும் எனவும் இதன் மூலம் 115 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுரைச்சோலை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறினை பழுதுபார்ப்பதற்காக இரண்டு சீன நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

No comments: