தேசிய மீலாத் போட்டியில் கலந்து கொண்ட எமது ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் எம்.ஐ.எம்.அம்ஹர் தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் போட்டி சிங்கள பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு குறித்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எம்.ஐ.எம்.அம்ஹர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.எம்.இப்றாகீம் மதனியின் புதல்வராவார்.
குறித்த போட்டியில் கலந்து கொண்டு பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மாணவன் அம்ஹரை பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments: