கொழும்பு, பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள வீட்டுத்தொகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தீப்பரவலை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1/21/2022 02:03:00 PM
பொரளையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல் - 5 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: