கடந்த 23.01.2022 அன்று சிவானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சிவானந்தா தேசிய பாடசாலையின் தற்போதுள்ள களநிலமையை ஆராய்வதற்கான விசேட பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் உயர்தர பரீட்சை நடைபெற உள்ளதால் இக்குறுகிய கால அழைப்பை ஏற்று சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவ தவறாது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு சிவானந்தா பழைய மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments: