News Just In

12/22/2021 07:28:00 PM

கோறளைப்பற்று மத்தியில் பிரதேச கலாசார விழா!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான வருடாந்த கலைஞர் சுபதம் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (21) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கினைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டு நினைவுச்சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் வீ.தவராசா, பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்






No comments: