News Just In

12/12/2021 08:44:00 PM

”கோட்டாபய”வுக்கும் இந்தியாவுக்கும்” தமிழ் கட்சிகள் விடுத்துள்ள சவால்!



இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தம் இறுதி தீர்வாகாது. அதற்கு அப்பால் செல்லவேண்டும்.எனினும் இலங்கையின் சட்டத்துக்குள் உள்ள 13வது திருத்தத்தை அமுல் செய்து காட்டுமாறு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இறுதிப்போரில் இலங்கை வெற்றி பெற உதவிய இந்தியாவுக்கும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் சந்திப்பை அடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த சவாலை விடுத்தார்.

No comments: