கொரோனாவின் புதிய பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளார். நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய தொற்றாளர்களை அடையாளம் காண முடியாது. இந்த பிறழ்வை உடனடியாக அடையாளம் காண முடியாது என்றும், சோதனை விலை அதிகம், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிக ஆபத்துள்ள குழுக்கள் கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் பிசிஆர் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அனைத்து பொது நடவடிக்கைகளும் விமான நிலையங்களுக்குள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: