News Just In

6/27/2025 06:41:00 PM

காத்தான்குடி, மண்முனையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் முக்கிய தேடுதல் நடவடிக்கை!

காத்தான்குடி, மண்முனையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் முக்கிய தேடுதல் நடவடிக்கை



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்னாய்க்க தெரிவித்தார்.

இச்சுத்தி வைப்பில் 50 போலீசார் 6 விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முக்கிய கேந்திர நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

கிழக்கு மாகாண சிரிஷ்டபோலீஸ்மாஅதிபரின்அச்சகபணிப்புரைன்பேரில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காத்தான்குடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரெட் நாயக் தலைமையில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன

இதன் இப்போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பாரு விளக்கத் தகடுகளை பொருத்தி இருந்த ஹெல்மெட் அணியாத கண்ணாடிகள் பொருத்தப்படாத 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைப்பற்றப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேளை சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது போதையில் வாகனம் செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் ஐஸ் போதை பொருளை வைத்திருந்த இருவரும் கஞ்சாவை வைத்திருந்த மூவரும் ஆக ஏழு பேர் போதைப் பொருட்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெறுகின்றனர்.







No comments: