
தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஆலய திருவிழா திருச்சொரூப பவனியின் போது இந்து கோவில் ஒன்றில் இருந்த நபர் அங்கிருந்த பூஜை பொருட்களின் மூலம் திருச்சொரூபத்திற்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அந்த கணத்தில் நிகழ்ந்த சம்பவமானது அங்கிருந்தவர்களை மட்டுமன்றி பார்ப்பவர்களையும் நெகிழ்ச்சிக்கு உட்படுத்தியுளளது.
இவ்வாறு இடம்பெறும் செயற்பாடுகள் மூலமே நாட்டில் இனமத ஒற்றுமை நிலைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: