News Just In

12/12/2021 09:54:00 PM

கேஸ் அடுப்பு வெடிப்பு


எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் நான்கு கேஸ் அடுப்புகள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு கேஸ் அடுப்புகள், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் தலா ஒரு கேஸ் அடுப்புகள் என நான்கு கேஸ் அடுப்புகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை உடைந்து சேதமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கேஸ் அடுப்புக்கள் மாத்திரமே வெடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.எரிவாயு அடுப்புக்கள் அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வெடிப்பதால் மக்கள் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உயிர் பாதிப்புக்கள் இடம்பெறாத வண்ணம் காணப்படுகின்றது.


.


No comments: