News Just In

12/19/2021 06:48:00 AM

தருமபுரம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 71 மாணவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது!

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையிலான பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்த நிலையில் குறித்த படசாலையில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 16 ஆம் திகதி கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 370 மனவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் உள்ள 320 மாணவர்கள் மட்டுமே இந்த பரிசோதனையில் பங்கேற்றனர்.

அவர்களில் 71 மாணவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதற்கு காரணமாக அவர்கள் பயன்படுத்தும் அலைப்பேசி கூறப்படுகிறது. 71 மாணவர்களும் இன்றையதினம் மேலதிக கண்பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: