திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஆற்றின் ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகள் படகு ஒன்று இயக்கப்பட்டு வருகின்றது. படகில் பயணிகள் பாதுகாப்பாக ஏறுவதற்கு தற்காலிக இடமொன்றும் கடற்படையால் அமைக்கப்பட்டுள்ளது.
No comments: