News Just In

10/23/2021 09:11:00 AM

காரைதீவு பிரதேசசபை உபதவிசாளரினால் வறிய குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு..


காரைதீவு பிரதேச செயலகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளரும், காரைதீவு பிரதேச முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம். ஜாஹீரின் ஏற்பாட்டில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த இலவச குடிநீர் இணைப்பிற்காக தனது ஜாஹிர் பவுன்டேஷன் நிதியத்தினூடாக பணம் செலுத்திய பற்றுச்சீட்டினை காரைதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் இன்று பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார். மேற்படி நிகழ்வில் ஜாஹீர் பவுன்டேஷன் அமைபின் செயலாளர் எஸ்.பஸ்லூனும் கலந்துகொண்டார்.




No comments: