News Just In

10/27/2021 07:49:00 PM

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் - வாழைத் தோட்டம் துவசம்சம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள திக்கோடைக் கிராமத்தினுள் செவ்வாய்க்கிழமை (26) நள்ளிரவு புகுந்த காட்டு யானைக்கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கின்றனர். மூன்றுக்கு மேற்பட்ட காட்டுயானைகள் திக்கோடைக் கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த பயன்தரும் வாழைத்தோட்டங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு புhன்கிழமை(27) அதிகாலை வேளையில்தான் கிராமத்தைவிட்டு நகர்ந்ததாக அக்கிராமத்தவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள திக்கோடை, தம்பங்கேணி, களுமுந்தன்வெளி, தும்பங்கேணி, நவகிரி நகர், கண்ணபுரம், காலையடிவட்டை, உள்ளிட்ட பல எல்லைப் புறக்கிராமங்களில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டு வருவதோடு, பயன்தரும் பயிரினங்களையும், வீடுகளையும், அழித்து வருவதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

எல்லைப் புறங்களை மையமாக வைத்து யானைப்பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

.எச்.ஹுஸைன்





No comments: