வீட்டுக்கு வீடு காணி உறுதிப்பத்திம் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்று வியாழக்கிழமை(28) மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு களுதாவளை வீச்சுக்காலை வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நடைபெற்றது.
இதன்போது காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, மட்டக்களப்பு மவாட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் நிலந்த விஜயசிங்க, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் சேரகுமாரன் விமலாராஜ், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, களுதாவiளியில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் குடியிருந்தவர்களுக்கு இதன்போது காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டன.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: