News Just In

10/28/2021 07:31:00 PM

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் வினாப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைப்பினால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு முன்னோடி பரீட்சை வினாப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அஹ்ஸாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாக கல்குடா ஸகாத் நிதிய உப தலைவர் மௌலவி ஏ.பி.எம். முஸ்தபா (இஸ்லாஹி) கலந்து கொண்டு பாடசாலை அதிபர்களிடம் வினாப்பத்திரங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)




No comments: