கொரோனா தொற்று அதிகரிப்பு நிலையிலும் மக்களுக்காக தொடர்ந்தும் சிறந்த சேவையினை ஆற்றிவரும் மட்டக்களப்பு மாநகர ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு சர்வமத குழுவினரால் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இவ்வாறான உதவிகளை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவினருக்கு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: