News Just In

8/04/2021 11:52:00 AM

1 கோடி ரூபா நிதியில் கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானமீட்டும் திட்டம்...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய கடடைத்தெருக்கள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு (03) இடம்பெற்றது.

அவரது முயற்சியின் பயனாகவே 1 கோடி ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் கே.எம் நிஹார் குறிப்பிட்டார்.

குறித்த திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக இன்று அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சந்தைக் கட்டிடத் தொகுதிக்குள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி அலுவலகத்தின் பொறியியலாளர் திரு கெளரிபாலன், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திரு தென்னக்கோன் சபையின் உறுப்பினர்களான அலி ஆசிரியர், ஜிப்ரி, றிபாஸ், நபிரா, அஸ்மி, இப்னுள்ளா மற்றும் அனிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments: