News Just In

8/04/2021 01:52:00 PM

திருகோணமலை- கன்னியா சிவன் ஆலயத்தில் பிதிர் கடன் நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதி...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை கன்னியா சிவன் ஆலய வளாகத்தினுள் எதிர்வரும் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமவாசை தின பிதிர் (இறந்தவர்களுக்கான) கடன் தானம் வழங்கல் நிகழ்விற்கு அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் காலை 10.00 மணிவரை நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிதிர் கடன் நிறைவேற்றும் அடியார்கள் அன்றைய தினத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து கலந்து சிறப்பிக்கலாம் என ஆலய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

No comments: