News Just In

8/13/2021 06:40:00 PM

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து முற்றாக தடை...!!


இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி அட்டையின்றி, பொது இடங்களுக்கு பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

துறைமுக, விமான நிலைய, விவசாயத்துறை மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிப்பெற்ற ஆடைத்தொழிற்சாலை மற்றம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

No comments: