News Just In

8/31/2021 08:06:00 AM

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்கள் இருவருக்கு பதவியுர்வுடனான இடமாற்றம்...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பரமேஸ்வரன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.சிவதாசன் ஆகிய இருவரும் பதவியுர்வுடனான இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருவருக்கும் நினைவுச்சின்னம், நினைவுப்பரிசில்களும் அரசாங்க அதிபர் தலைமையிலான உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இருவரும் பொன்னாடை அணிவித்தும் கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

1994 ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவைக்கான திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவ்விரு உத்தியோகத்தர்களும் 27வருடங்கள் அர்ப்பணிப்புடனான சேவையை மாவட்ட மக்களுக்காக வழங்கியுள்ளனர்.

கே.பரமேஸ்வரன் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் கே.சிவதாசன் மகளிர் மற்றும் சிறுவர் அபவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமைளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



No comments: