(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கானின் வழிகாட்டலில் திங்கட்கிழமை (9) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை, மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம், செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலயம், தியாவட்டவான் அறபா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இரண்டாவது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் எனப்பலரும் வருகை தந்து தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
இதன்போது முதலாவது தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள தவறவிட்டவர்களுக்கு குறித்த பாடசாலைகளில் முதலாவது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: