News Just In

8/09/2021 08:06:00 PM

கிழக்கு மாகாண நிதிப் பிரிவுக்கு பிரதி பிரதம செயலாளர் நியமனம்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு மாகாண சபை நிதிப் பிரிவின் பிரதி பிரதம செயலாளராக சிங்கநாயகம் குலதீபன் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யுஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவிக்கான நியமனத்தைப் பெற்றுக் கொண்ட அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் இலங்கை கணக்காளர் சேவையின் விசேட தரத்தினைப் பெற்று நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் இது கருதப்படுகின்றது.

குலதீபன் இலங்கை கணக்காளர் சேவையில் 1992ம் ஆண்டு நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத் தில் கணக்காளராக கடமையை ஆரம்பித்து பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கணக்காளராகவும் சுகாதார அமைச்சு கொழும்பில் நிதிப் பிரிவுப் பணிப்பாளராகவும் கல்வியமைச்சில் பிரதம கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவ்வாண்டு கணக்காளர் சேவையின் விசேட தரத்தினை பெற்றுக் கொண்ட இவர் மருந்து உற்பத்தியாக்கல் விநியோகித்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சு பிரதான நிதி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார்.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக வியாபார நிர்வாகமானி சிறப்பு பட்டத்தையும் வியாபார நிர்வாகத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.




No comments: