News Just In

8/27/2021 07:45:00 PM

கிண்ணியா ஆயிலியடி - 4ம் வாய்க்கல் - முள்ளிப்பொத்தானை வீதிப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை...!!


(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தின் ஆயிலியடி - 4ம் வாய்க்கால்-முள்ளிப்பொத்தானை வீதியினை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் சுமார் 7 கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

ஆயீலியடி -நான்காம் வாய்க்கால் மற்றும் முள்ளிப்பொத்தானை வீதியினை புனரமைப்பு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுடன் பொறியியலாளர் குழுவினர் இன்று(27) பார்வையிட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு,வீதி தொடர்பான மேலதிக தகவல்களையும் பொறியியலாளர் குழுவினர் கேட்டறிந்து கொண்டார்கள்.
ஆயிலியடி -நான்காம் வாய்க்கால் மற்றும் முள்ளிப்பொத்தானை புனரமைப்பு செய்யும் பட்சத்தில் முள்ளிப்பொத்தானை கந்தளாய் மற்றும் வான்எல,கிண்ணியா மக்களின் போக்குவரத்து மிகவும் இலேசாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments: