News Just In

7/28/2021 10:55:00 AM

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தப்படல் தொடர்பில் தகவல்களை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்...!!


நாட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433 333 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீக்காயங்களுடன் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கப்பட்ட பொது மயானத்திற்கு நேற்று (27) பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: