சுபீட்சத்தை நோக்கிய சௌபாக்கிய வேலைத் திட்டத்தின் கீழ் சேதன உர உற்பத்தியை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான செயற்முறை விளக்கமளிக்கும் வழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (26) தேத்தாதீவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தோத்தாத்தீவு செட்டிபாளையம் விவசாயப் போதனாசிரியர் எம்.குணமகராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது விவசாயப் போதனாசிரியர் பி.சிறிபவன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயன்முறை விளக்கப் பயிற்சியையும், தெழிவூட்டல்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பானர் த.மேகராசா, மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: